அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து ராஜவர்மனை நீக்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வர்.
சட்டப்பேரவை தேர்தலில் சாத்தூரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அதிருப்தியில் இருந்த அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன், டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். இதன்பின் பேசிய அவர், கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை வேட்பாளராக நிறுத்தவில்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் தான் எனக்கும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என கூறிய, சசிகலாவிற்கு செய்த துரோகத்திற்கு மக்கள் உரிய பதிலளிப்பார்கள் என கூறியுள்ளார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கழகத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் ஈடுபட்டதாலும், எம்எஸ்ஆர் ராஜவர்மன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…