#BREAKING: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – சிபிஐ புதிய மனு!

Default Image

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றசாட்டுகளை பதிவு செய்ய அனுமதி கோரி புதிய மனு.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது கூட்டு சதி பிரிவில் வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக 120 பி மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றசாட்டு பதிவு செய்ய அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தமிழகம் மட்டுமின்று நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது.

இந்த வழக்கு ஆரம்பத்தில் விசாரணைக்கு வரும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என நீதிபதி தனது கருத்தை பதிவு செய்திருந்தார். இருப்பினும், இவ்வழக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது கூட்டுச்சதி பிரிவுகள் கீழ் பதிவு செய்ய அனுமதி கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை அடிப்படையில் கூடுதல் பிரிவுகளில் குற்றசாட்டு பதிவு செய்ய அனுமதி வேண்டும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்