#BREAKING: சசிகலா அதிமுகவின் தலைமையேற்க வேண்டும்- அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ..!

Default Image

சசிகலா தலைமையேற்று டிடிவி தினகரன் வழிநடத்தினால் அதிமுக நல்ல நிலைக்கு வரும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது.  கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆறுக்குட்டி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா அதிமுகவின் தலைமையேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சசிகலா தலைமையேற்று டிடிவி தினகரன் வழிநடத்தினால் அதிமுக நல்ல நிலைக்கு வரும். எனக்கு கட்சி பொறுப்பு தரவில்லை என்பதால் தினகரன், சசிகலாவுக்கு ஆதரவாக பேசவில்லை.

அதிமுகவின் தலைமை சரியில்லாததால் தான் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு தோல்வி. 4 ஆண்டுகளுக்கு முன் உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும். தனித்தனியாக இருந்ததால் தான் கொங்கு மண்டலத்தை கூட அதிமுக உள்ளாட்சி தேர்தலில் இழந்துள்ளது. அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுகவுக்கு வரும் காலங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் என தெரிவித்தார்.

சசிகலா, தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வலியுறுத்தி தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நேற்று தீர்மானம் நிறைவேற்றினர். கடந்த வருடம், சரியாக இதே நாளில் கட்சியிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 04 03 2025
IndvsAusSfinal
TN CM MK Stalin
steve smith travis head
Actress Vijayalakshmi
tvk vijay ADMK jayakumar
Russia-Ukraine war