தமிழ்நாடு

#BREAKING : குட்கா பொருட்கள் விற்பனை – மேலும் 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி..!

Published by
லீனா

தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக, குட்கா குடோன் உரிமையாளார்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, மத்திய கலால் அதிகாரி உட்பட 6 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை ஆணையர் உள்ளிட்ட 11 அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில், காவல்துறை அதிகாரிகரிகளுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த அனுமதி கடிதம் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து சிபிஐ மத்திய அரசிடம் அனுமதி கோரியது. இந்த அனுமதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கு பலமுறை தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், குட்கா முறைகேடு வழக்கில் மேலும் 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி அளித்த கடிதத்தை மூடி முத்திரையிட்ட உறையில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

5 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

5 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

7 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

8 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

8 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

9 hours ago