#BREAKING: ஊரக வேலை திட்ட நிதி – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

Default Image

வேலையே செய்யாமல் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவார்கள் என நீதிபதிகள் கவலை.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அந்நிய நாட்டு மரங்களை அகற்ற ஊரக வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்தலாமா என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அந்நிய மரங்களை அகற்ற 100 நாள் வேலை திட்ட நிதியை பயன்படுத்த முடியாது என மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, வேலையே செய்யாமல் வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவார்கள் என நீதிபதி வேதனை தெரிவித்தனர்.

மரங்களை அகற்ற மலைவாழ் மக்களை பயன்படுத்தலாம் என நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் தெரிவித்தனர். அகற்ற 100 நாள் வேலை திட்ட நிதியை பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்