உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன.
இந்நிலையில், ஆலோசனை கூட்டத்திற்கு பின், உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த கூட்டத்தில், திமுக சார்பாக வாக்குசாவடிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அதிமுக சார்பாக வாக்குப்பதிவு நேரத்தை சற்று குறைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு, விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…