#BREAKING : 7 பேர் விடுதலை- ஆளுநர் முடிவெடுக்கலாம்

Default Image
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது பற்றி ஆளுநரே முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில்   7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த தீர்மானத்துக்கு  தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அப்பொழுது ,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனின் மனு மீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது பற்றி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்றும் நளினியின் மனு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தது.மேலும் 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கோரிக்கை 2018 -ஆம் ஆண்டிலே நிராகரிக்கப்பட்டுவிட்டது என்று மத்திய அரசு தெரிவித்தது.இறுதியாக சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி  12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

india vs pakistan war
Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri
cake inside Pakistan High Commission