#BREAKING: ராஜேந்திர பாலாஜி தலைமறைவு; டெல்லியை நோக்கி தனிப்படை..!

Default Image

ராஜேந்திர பாலாஜி, டெல்லியில் உள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து டெல்லிக்கு தனிப்படை சென்றுள்ளது.

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன்கோரி மனுதள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவானார். அவரை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறது. தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பண மோசடி வழக்கில் தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர்.  ராஜேந்திர பாலாஜி, டெல்லியில் உள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து டெல்லிக்கு தனிப்படை சென்றுள்ளது. சமீபத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சத்துணவு பணியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் மோசடி செய்ததாக சாத்தூரை சார்ந்த பெண் ஒருவர் விருதுநகர் எஸ்.பி மனோகரிடம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live
live ilayaraja
rahul gandhi bjp
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster
TVKVijay - TN govt