#BREAKING: ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Default Image

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3-க்கு மேல் பணமோசடி செய்ததாக தொடரபட்ட வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே, பணமோசடி வழக்கில், ராஜேந்திர பாலாஜியை கைத செய்வதற்கு 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்க மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். முன்ஜாமீன் கிடைக்குமா என்று நாளை மறுநாள் தெரியவரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்