#Breaking:அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Default Image

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன்காரணமாக,மார்ச் 6 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்தது.

தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில்  லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா,மன்னார் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலிலும் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளர்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்