ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்து விலகுவதாக அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் அறிவிப்பு.
அதிமுகவில் இருந்து இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.
கோவை செல்வராஜ் கூறுகையில், திராவிட பாரம்பரியத்தை விட்டு விலகமாட்டேன், விரைவில் நல்ல முடிவு எடுப்பேன், இதுபோன்று அரசியலை விட்டு விலகமாட்டேன், ஆனால் துரோகிகளோடு சேர்ந்து ஒருநாளும் பணியாற்றமாட்டேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரைவிட பதவிதான் முக்கியம் என பன்னீரும், பழனிசாமியும் இருந்தனர் என குற்றசாட்டியுள்ளார். எனவே, சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்ற என் மனசாட்சி இடம்கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என்று கோவை செல்வராஜின் அறிவிப்பை தொடர்ந்து, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து கோவை செல்வராஜ் விடுவிக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், கோவையில் 4 புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…