15 நாட்களுக்கு சென்னையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்,மனிதசங்கிலி , பேரணி, உண்ணா விரதங்கள் போன்ற அனைத்து வகையான போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 3-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகின்ற 17-ம் தேதியுடன் முடிய இருந்த நிலையில் பிரதமர் மோடி 4-ம் கட்ட ஊரடங்கு முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் 9227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வரும் 28 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு சென்னை காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து வகையான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனிதசங்கிலி , பேரணி, உண்ணாவிரதங்கள் போன்றவை நடத்த தடை என சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் அதிகமாக கொரோனா பரவி வருவதால் ஊரடங்கு காலத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனிதசங்கிலி , பேரணி, உண்ணாவிரதங்கள் போன்றவைகளில் ஈடுபடும்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என்ற எண்ணத்தில் இந்த உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்த்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…