#BREAKING : சொத்துவரி உயர்வு – மக்களுக்கு திமுகவின் தேர்தல் பரிசே சொத்துவரி உயர்வு..!

Default Image

சொத்துவரி உயர்வு குறித்த முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை குறைந்தபட்சமாக 25 % முதல் அதிகபட்சமாக 150 % வரை உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவிப்பு விடுத்தது.  அதிமுக கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், நேற்று பல இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள் கோரியநிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் சொத்து வரி உயர்வு குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து, சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது என்பதால், மக்கள் துணை நிற்க வேண்டும். ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காமல் சொத்து வரி மாற்றப்பட்டுள்ளது.

புதியபிரதிநிதிகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளை சமாளிப்பதற்கு வரி உயர்வு தேவை என்றும், சொத்துவரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை என்றும் முதல்வர் விளக்கமளித்துள்ளார். முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சொத்துவரி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் சொத்துவரியை உயர்த்த வேண்டுமென மத்திய அரசு குறிப்பிடவில்லை மக்களுக்கு திமுகவின் தேர்தல் பரிசே, சொத்துவரி உயர்வு என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்