தமிழகத்தில் பணியாற்றும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு.
கடந்த 2009-ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் முகவரி பிரிவு அதிகாரி ஷில்பா சதிஷ் பிரபாகர் உள்பட பணியாற்றி வரும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்று மாநில கேடரில் பணியாற்றும் 2006 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேருக்கு பதவி உயர்வு வழங்கி, சூப்பர் டைம் ஸ்கேல் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஹனிஸ் சாப்ரா – இயக்குனர், பொருளாளர், விவகாரத்துறை, டெல்லி. அஜய் யாதவ் – பண்பாட்டுத்துறை அமைச்சக இயக்குனர். ஜி. லட்சுமி பிரியா – ஆணையர், தொழில்நுட்ப கல்வி, சென்னை. எஸ் ஜெயந்தி – கூடுதல் ஆணையர், நில நிர்வாகம், சென்னை. டாக்டர் பி சங்கர் – தலைமை நிர்வாக அலுவலர், காதி கிராம தொழில் வாரியம், சென்னை.
கே.விவேகானந்தன் – நிர்வாக இயக்குனர், ஆதி திராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனம், சென்னை. ஏ.ஞானசேகரன் – ஆணையர் கால்நடை வளர்ச்சித்துறை, சென்னை. டிஎஸ் ராஜசேகர் – உறுப்பினர் செயலர் மாநில திட்ட ஆணையர், சென்னை ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…