#BREAKING : பொங்கல் பரிசுக்கு தடை – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Default Image
  • பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 
  • பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்திற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி முதலமைச்சர் பழனிசாமி கடந்த நவம்பா் மாதம் பொங்கல் பரிசுத் தொகுப்பு  திட்டத்தை  தொடங்கி வைத்தாா்.அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்றும் இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.அதில், 1 கிலோ பச்சரிசி,1 கிலோ  சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.பின்னர் ரூ.1000 பொங்கல் பரிசு தர ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலையைச்  சேர்ந்த அலமேலு என்பவர்  வழக்கு தொடர்ந்துள்ளார்.அவரது வழக்கில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வகையில் பொங்கல் பரிசு அமைந்துவிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார் .இந்த வழக்கினை உயர்நீதிமன்றம் மதியம்  விசாரிப்பதாக அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk