#BREAKING: பொதுக்குழுவிற்கு தடையா? ஓபிஎஸ், ஈபிஎஸ் பதிலளிக்க உத்தரவு!

Default Image

பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உட்கட்சி தேர்தலுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருப்பதால் பொதுக்குழுவை நடத்த கூடாது என ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் சி.பாலகிருஷ்ணன் தொடர்ந்த மனுவுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து. ஏற்கனவே, பொதுக்குழுவிற்கு எதிரான மற்றொரு வழக்கின் விசாரணை நாளைய தினத்திற்கு ஓதி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்