#BREAKING: முன்னாள் முதல்வர் பழனிச்சாமி குறித்து அவதூறாக பேச தடை – உயர்நீதிமன்றம்

Default Image

டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கம் ரூ.1.10 கோடி மானநஷ்டஈடு தரக்கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு.

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் தன்னை பற்றி அறப்போர் இயக்கம் பேச தடைகோரி, எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்திருந்தார்.

அறப்போர் செயல் அவப்பெயர் ஏற்படுத்தியதுடன் மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளது. டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கம் ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரியிருந்தார். ஆதாரங்களில் அடிப்படையிலேயே குற்றச்சாட்டப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், அறப்போர் இயக்கம் அவதூறாக பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கம் ரூ.1.10 கோடி மானநஷ்டஈடு தரக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்