#Breaking:தமிழகத்தில் மின்வெட்டு – சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர்!

Published by
Edison

தமிழகத்தில் சமீப நாட்களாக நிலவிவரும் மின்வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. கோடைகாலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடைகாலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது.

ஈபிஎஸ் கேள்வி:

ஆனால்,இந்த அரசு முறையாக மின்சாரத்தை பெறவில்லை. மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகின்றது. தடையில்லா மின்சாரம் கொடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது இந்த அரசு? கேள்வி எழுப்பினார்.

அமைச்சரின் பதில்:

இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.ஆனால் மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி தருகிறது என்றும் இதனால்தான் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்ப்பட்டுள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.குறிப்பாக,அதிமுக ஆட்சியிலும் 68 முறை மின்வெட்டு இருந்ததாக செந்தில் பாலாஜி கூறினார்.

அதிமுக வெளிநடப்பு:

இந்நிலையில்,மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து சட்டப் பேரவையில் இருந்து அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ் அவர்கள்:”தமிழகத்தில் தற்போது தொடர் மின்வெட்டு ஏற்பட்டு,மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனை அரசின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வந்தோம்.

அரசின் தவறான முடிவு:அதிமுக

ஏனெனில்,தமிழக மின்சார வாரியம் மற்றும் தமிழக அரசு நிலக்கரியை சரியாக கொள்முதல் செய்யாததும்,தவறான முடிவுகளுமே காரணம்.இனி வரும் காலங்களில் கோடை வெயில் அதிகரிக்கும்,மின் தேவை அதிகரிக்கும்.எனவே,அதற்கு ஏற்றவாறு மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.அதற்கு தேவையான நிலக்கரியை கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.

ஆனால்,நிலக்கரி இல்லாத காரணத்தினால் அனல்மின் நிலையங்கள் மின் உற்பத்தி செய்ய முடியாமல் மின்வெட்டு ஏற்பட்டு,மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக,மின்வெட்டால் மாணவர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே,இதனைக் கண்டித்து வெளிநடப்ப்பு செய்துள்ளோம்”,என்று தெரிவித்துள்ளார்.

 

Recent Posts

பழமையான கோவில்களை புனரமைப்பு செய்ய ரூ.125…தேவாலயங்களை சீரமைப்பதற்காக ரூ.10 கோடி!

பழமையான கோவில்களை புனரமைப்பு செய்ய ரூ.125…தேவாலயங்களை சீரமைப்பதற்காக ரூ.10 கோடி!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…

19 minutes ago

TNBudget 2025 : மெட்ரோ ரயில் விரிவாக்கம்… 1,125 புதிய மின்சார பேருந்துகள்.!

சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…

25 minutes ago

TNBudget 2025 : 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்…

30 minutes ago

தமிழக பட்ஜெட் 2025 : 9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள்… வேலைவாய்ப்பு குறித்த குட் நியூஸ்!

சென்னை :  சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…

58 minutes ago

தமிழக பட்ஜெட் 2025 : சென்னையில் புதிய நீர்த்தேக்கம்… ரூ.360 கோடி ஒதுக்கீடு!

சென்னை : சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…

2 hours ago

TNBudget 2025 : புதிய கல்லூரிகள், AI, சதுரங்கம்.., மாணவர்களுக்கான அறிவிப்புகள்!

சென்னை : தமிழக அரசின் 2025 - 2026-ன் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் மாநில…

2 hours ago