தொடர்மழை காரணமாக தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.11.2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவிருந்த நிலையில்,தற்சமயம் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 8.11.2021 மற்றும் 9.11.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று முன்தினம் தமிழக அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,தொடர் மழை காரணமாக நவம்பர் 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா அறிவித்துள்ளார்.
வரும் நாட்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் முழுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும், புதிய தேர்வுக்கான அட்டவணைகள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…