பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எந்தவிதமான சிரமும் இல்லாமல் தங்களது ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
11 ,12 மற்றும் 13 ஆகிய நாட்களில் மொத்தம் 10 ஆயிரத்து 71 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில் சென்னையில் இருந்து மட்டும் 4,078 பேருந்துகளும், மற்ற இடங்களில் இருந்து 5,993 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில் 11-ம் தேதி அன்று சென்னையில் இருந்து 176 பேருந்துகளும், மற்ற இடங்களிலிருந்து 1297 பேருந்துகளும் இயக்கப்படயுள்ளது.
12-ஆம் தேதி சென்னையில் இருந்து 1950 பேருந்துகளும், மற்ற இடங்களில் இருந்து 1,910 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 13-ஆம் தேதி சென்னையிலிருந்து 1952 பேருந்துகளும், மற்ற இடங்களிலிருந்து 2786 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மொத்த முன்பதிவு மையங்கள் சென்னையில் 13 இடங்களில் உள்ளது. அதில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் இரண்டு மையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒரு மையங்களும் உள்ளது.
மேலும் முன்பதிவு செய்துகொள்ள இணையதள வசதியான www.tnstc.in,tnstc official app, www.redbus.in,www.paytm.com,www.busindia.com போன்ற இணைய தளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…