Breaking: சின்னங்கள் மாறியதால் 8 மையங்களில் வாக்குப்பதிவு நிறுத்தம்.!

Published by
murugan
  • தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் 15-வது வார்டில் வேட்பாளர்களது சின்னங்கள் இடம் மாறியிருப்பதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது.
  • 8 மையங்களில் அதிமுக , திமுக சின்னங்கள் மாறி இருந்ததால் , இதன் காரணமாக 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை  2 கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் கடந்த 27-ம் தேதி முதற்கட்ட தேர்தலில் 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது.

இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களாக உள்ளனர். முதல் கட்ட தேர்தலை விட இரண்டாம் கட்ட தேர்தல் அதிக பதவிக்கு தேர்தல் நடைபெறுவதால் வாக்குப்பெட்டிகள், வாக்குச்சாவடி மையங்கள், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் 15-வது வார்டில் வேட்பாளர்களது சின்னங்கள் இடம் மாறியிருப்பதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது. ஒரத்தநாடு ஒன்றியம் 15-வது வார்டில்  உள்ள 8 மையங்களில் அதிமுக , திமுக சின்னங்கள் மாறி இருந்ததால் வேட்பாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

 

Published by
murugan

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

25 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

44 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

55 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

59 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago