#Breaking : 10 மணிக்கு மேல் உணவகத்தில் உணவு உண்ட பொதுமக்கள் மீது போலிசார் தாக்குதல்…!

Default Image

கோவையில் காந்திபுரத்தில், உணவகத்தில் கடை ஊழியர்கள், பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள், கடந்த 10- ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், கோவையில் காந்திபுரத்தில், உணவகத்தில் அமர்ந்து சிலர் உணவருந்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, கடை ஊழியர்கள், பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், பெண் உட்பட பல காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, கடை ஊழியர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்