#BREAKING: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் பிரதமர்!

Default Image

முதலமைச்சர் முக ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் பிரதமர் மோடி.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஸ்டாலினிடம், பிரதமர் மோடி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வீட்டு தனிமையில் இருந்த நிலையில் நேற்று காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அணியமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் முதல்வரிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார். முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் பிரதமர் கேட்டறிந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்