#Breaking:மேகதாது அணை திட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் -தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு…!

Published by
Edison

மேகதாது அணை குறித்த கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

மேகதாது பகுதியில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு, கடந்த 2019 ஆம் ஆண்டில் திட்ட மதிப்பீட்டு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு தாக்கல் செய்தது. ஆனால், போதிய தரவுகள் இல்லை என்று கூறி, இதனை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது.இதற்கிடையில்,கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சி உட்பட பிற அரசியல் கட்சிகள் தற்போது வரை எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன.

இதனையடுத்து,காவிரி நதிநீர் பங்கீடு குறித்து, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை,அம்மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர் கோவிந்த கரஜோல் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முன்னதாக டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும், தென்னிந்திய நதிகளை இணைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து, புதிய திருத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டு அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு தாக்கல் செய்தது.

இதனால்,மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.அப்போது,மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில்,மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு அளித்த விரிவான திட்ட  அறிக்கையை ரத்து செய்ய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

மேலும்,இந்த திட்ட அறிக்கையை கர்நாடக அரசிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்றும்,குறிப்பாக கர்நாடக அரசு வேறு ஏதேனும் அறிக்கை அளித்தாலும் அதை பரிசீலிக்க கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும்  தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

Recent Posts

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

32 minutes ago

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

2 hours ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

2 hours ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

3 hours ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

3 hours ago

தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…

4 hours ago