#BREAKING : அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி..!

Default Image

பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய அவகாசம் வழங்கவில்லை.  கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்