இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இன்றுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்தநிலையில் பிரதமர் மோடி இன்று காலை மக்களிடம் உரையாற்றும் போது ஊரடங்கு மேலும் 19 நாள்கள் நீட்டிக்கப்பட்டு மே 3-ம் தேதி வரை ஊரடங்கு இருக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகள் தொடர்ந்து மீன்பிடிக்கலாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படகு உரிமையாளர்கள் கொரோனா தடுக்க முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணத்தை தரவேண்டும் . மீன்பிடி துறைமுகம் , மீன்பிடி இறங்குதளம் ,கடற்கரை பகுதியில் மீன்களை பொது ஏலம் மூலம் விற்கக்கூடாது.
மீன் இறங்குதல் , சந்தைக்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகளுக்கு குறைந்த ஆட்களை பயன்படுத்த வேண்டும். என்றும் ஆட்சியர் தலைமையிலான குழு எந்த நாளில் , எத்தனை படகுகளில் மீன்பிடிக்க செல்லலாம் என முடிவு செய்யும் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தற்போதைய ஊரடங்கு காலம் மீன் பிடி தடைக் காலமாக கருதி விசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபட அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…