தமிழகத்தில் ஆக- 10ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி .
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் மத்திய அரசு 3 கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதில் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி கொடுத்தது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உடற்பயிற்சி நிலையங்களை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும்
பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் (Tamil Nadu Gym Owners & Trainerswelfare Association) சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ளஉடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அக்கோரிக்கையினை பரிசீலித்த முதலமைச்சர்
மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆகஸ்ட் 5 தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் (stand alone only), 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் 10.8.2020 முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் (Standard Operation Procedure) தனியாக வெளியிடப்படும். அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…