தமிழகத்தில் முழு ஊரடங்கான நாளை திருமண விழாவிற்கு செல்ல அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் முழு ஊரடங்கான நாளை திருமண விழாவிற்கு செல்ல அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக நாளை முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், திருமண விழாவிற்கு செல்ல இருப்பவர்கள் திருமண அழைப்பிதழ் பத்திரிகையை காண்பித்து தங்கள் பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஊரடங்கு நாளான நாளை திருமணத்திற்கு செல்பவர்கள் அழைப்பிதழ் காண்பித்து பயணம் செய்யலாம். திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாளை அரசு தேர்வுகள் எழுத செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது திருமண விழாவிற்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…