#BREAKING: மூலப் பொருட்களை விற்க அனுமதி தேவை – வேதாந்தா நிறுவனம்

Vedanta has sought permission to sell Rs 200 crore worth of raw materials inside the Sterlite plant.

ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ள ரூ.200 கோடி மூலப்பொருட்களை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

இதுதொடர்பாக வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு விசாரணையில்,தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ள ரூ.200 கோடிக்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள் இருக்கிறது என்றும் மூலப்பொருட்களை எடுத்து விற்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வேதாந்தா நிறுவனம் தரப்பு வாதமாக முன்வைத்தது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வேதாந்தா வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

#BREAKING: மூலப் பொருட்களை விற்க அனுமதி தேவை – வேதாந்தா நிறுவனம்