#BREAKING : மக்களே எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு…!

Default Image

செம்பரம்பாக்கம் ஏரியின் 21.45 அடியாக உள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பியுள்ளன. அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டியதால், ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 1:30 மணிக்கு 500 கன அடி  திறக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு. திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் 21.45 அடியாக உள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்