#BREAKING: மாநிலங்களைவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார் பி.வில்சன்!

Default Image

நாடாளுமன்றம் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார் பி.வில்சன்.

டெல்லி நாடாளுமன்றம் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை திமுக உறுப்பினர் பி.வில்சன் தாக்கல் செய்தார். அதாவது, மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுத்து ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டம் 200-ல் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மேல் இதுபோன்ற சட்டத்தை நிலுவையில் வைக்க கூடாது என்றும் இது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் நடவடிக்கை எனவும் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்த பின் திமுக எம்பி வில்சன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்