காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேசமயம்,அவரது மகனான கார்த்தி சிதம்பரத்தின் வீடு,அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2010 முதல் 2014 வரை சீனர்கள் இந்தியா வர சட்ட விரோதமாக சுமார் 250 விசாக்கள் வாங்கி பெற்று தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும்,கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அளிக்கப்பட்டது குறித்தும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக,கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனையிட்டு வரும் நிலையில்,5 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து சோதனை நடைபெறுகிறது.அதன்படி,சென்னை,மும்பையில் தலா 3 இடங்களிலும், பஞ்சாப், கர்நாடகா,ஒடிசாவில் தலா 1 இடங்கத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே,சிபிஐ ரெய்டு குறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சிப்பதால் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக காங்.எம்எல்ஏ செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்,இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை,வரம்பு மீறிய செயல் எனவும்,ஏற்கனவே அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகள் சோதனையிட்ட நிலையில்,இந்த சோதனை எதற்காகவென மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…