#BREAKING: கரையை தொட்ட நிவர் புயலின் வெளிச்சுற்று.!

Default Image

நிவர் புயலின் முக்கிய பகுதி கரையை தொட இன்னும் 5 முதல் 6 மணி நேரம் ஆகும் என கணிப்பு.

அதி தீவிர புயலாக மாறிய நிவரின் வெளிச்சுற்று கடலூர் மாவட்டத்தில் கரையை தொட்டது. புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டதால் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

மேலும், புயலின் வெளிச்சுற்று கரையை தொட்ட நிலையில் இன்னும் 6 மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி கரையை தொடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நிவர் புயல் காரணமாக சென்னையில் 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் தற்போது காற்று வீசி வருகிறது.

அதி தீவிர புயலாக மாறிய நிவர் தற்போது 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்