ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, அதிமுக கொடி கட்டிய காரில் வருகை தந்த சசிகலா, ஓபிஎஸ் கையை பிடித்து ஆறுதல் கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
இதனையடுத்து, ஓபிஎஸ் மனைவி விஜயலக்ஷ்மி மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஸ் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தி, ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறினர். இந்நிலையில்,சசிகலா அவர்கள், ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, அதிமுக கொடி கட்டிய காரில் வருகை தந்தார். மருத்துவமனைக்கு வந்த அவர், ஓபிஎஸ் கையை பிடித்து ஆறுதல் கூறினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…
துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…
சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை ;…
லெபனான் : இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய மோசமான தாக்குதலில், 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட 2,000-க்கும்…