ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, அதிமுக கொடி கட்டிய காரில் வருகை தந்த சசிகலா, ஓபிஎஸ் கையை பிடித்து ஆறுதல் கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
இதனையடுத்து, ஓபிஎஸ் மனைவி விஜயலக்ஷ்மி மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஸ் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தி, ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறினர். இந்நிலையில்,சசிகலா அவர்கள், ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, அதிமுக கொடி கட்டிய காரில் வருகை தந்தார். மருத்துவமனைக்கு வந்த அவர், ஓபிஎஸ் கையை பிடித்து ஆறுதல் கூறினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…