அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ரவீந்திரநாத் அதிமுக எம்பியாகவே தொடர்கிறார் என தகவல்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை என்று மக்களவை சபாநாயகருக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். அதில், ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருதக்கூடாது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும் மக்களவை சபாநாயகருக்கு பதில் கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதத்தில் தற்போது இருக்கக்கூடிய உட்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல் இதுதொடர்பாக தேர்தல் ஆணியத்திடமும் நாங்கள் முறையிட்டு உள்ளோம். ஆகவே, ஈபிஎஸ் சார்பாக கொடுக்கப்பட்ட இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை நீக்கிய கடிதம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ரவீந்திரநாத் அதிமுக எம்பியாகவே தொடர்கிறார் என்றும் கூறப்படுகிறது. மக்களவை ஆவணங்களில் ஓபி ரவீந்திரநாத் அதிமுகஎன்பதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினராக ரவீந்திரநாத் இருந்து வருகிறார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…