எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களையும் அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கக் கூடாது என்று டிஜிபியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்திற்கு பின் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. ஜூலை 21-ஆம் தேதி சீல் அகற்றப்பட்டு, அதிமுக அலுவலக சாவி ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், 72 நாட்களுக்கு பின் ஈபிஎஸ் இன்று அதிமுக அலுவலகம் செல்கிறார். இன்னும் சற்று நேரத்தில் ஈபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்ல உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்தில் அனுமதிக்க கூடாது என்று டிஜிபி அவர்களுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருவதாலும், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதன் காரணமாகவும், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களையும் அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கக் கூடாது என்று அந்த புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…