#BREAKING : ஓபிஎஸ் கடிதம் பரிசீலனையில் உள்ளது – சபாநாயகர்

Published by
லீனா

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் வழங்கிய கடிதம் பரிசீலனையில் உள்ளது என சபாநாயகர் அப்பாவு கடிதம். 

கடந்த சில தினங்களுக்கு முன் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என சட்டப்பேரவை செயலகத்திற்கு ஈபிஎஸ் தரப்பில் கடிதம் அனுப்பி இருந்தார்.

இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி வேறு ஒருவருக்கு அளிக்கப்பட உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் அதிமுக சட்டமன்ற கட்சியின் நிர்வாகிகளை மாற்றக்கூடிய வகையில் மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் என்றும், பொதுக்குழு குறித்து நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தில் வழக்குகள் இருப்பதால் நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் வழங்கிய கடிதம் பரிசீலனையில் உள்ளது. ஓபிஎஸ் கடிதம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சி துணைத்தலைவர் தொடர்பாக ஈபிஎஸ்-யிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. எதிர்க்கட்சி துணை தலைவராக வேறு யாரையாவது நியமித்தால் ஏற்கக்கூடாது என ஓபிஎஸ் கோரிக்கை வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்னமும் ஆளுநரிடமிருந்து நீட் மசோதாவுக்கு சரியான பதிலில்லை. குடியரசு தலைவருக்கு அனுப்பியிருக்கிறார் என நம்புகிறோம்; சட்டமன்றத்தின் மரபுப்படி தீர்மானத்திற்கு உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்கவில்லையென்றால் மக்களை புறக்கணிக்கின்ற செயலாகத்தான் இதை கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago