#BREAKING: நான்கு பேரை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு!

Default Image

வெல்லமண்டி நடராஜன் உள்பட நான்கு பேரை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகளாக வெல்லமண்டி என் நடராஜன், ஆர்டி ராமச்சந்திரன், சி திருமாறன், ஆர்வி பாபு ஆகிய 4 பேர் நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மதுரை, திருச்சி, நெல்லை, புதுச்சேரி, விருதுநகர், திருப்பூர் மாவட்டங்களில் நிர்வாகிகளை நியமித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை கழக நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கத்தை நியமித்து ஓபிஎஸ் நேற்று அறிவித்திருந்தார். இதுபோன்று, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் 3 பேரை நியமித்து அறிவித்திருந்த நிலையில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளையும் நியமித்து அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக நியமனம் மற்றும் நீக்க அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதால் தொண்டர்களிடையே கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்