#Breaking: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் – தமிழக அரசு அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 9ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தொழில் நிறுவனங்கள், வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் தேவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் பங்கேற்றுயிருந்தனர்.

இந்த நிலையில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, ஆட்டோ ரிக்ஷ மற்றும் டாக்சிக்கு சாலை வரி கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிட்கோ நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய மனைவிலை, தவணை, வாடகை செலுத்த 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள், சுயதொழில் செய்பவர்கள் வங்கிக்கடன் பெறும்போது செலுத்த வேண்டிய முத்திரைத்தாள் பதிவுக்கட்டணம் செலுத்துவதில் டிசம்பர் 21 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த நிதியாண்டியில் முதலீட்டு மானியம் வழங்க ரூ.280 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 60% தொகையாக ரூ.168 கோடி உடனடியாக நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள தகுதியான அனைத்து நிறுவனங்களுக்கும் மானியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர்கள் இஎம்ஐ கட்டுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு வழங்க வலியுறுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று, மே மாதத்தில் காலாவதியாகும் ஆட்டோ, கால்டாக்சி வாகனங்களுக்கான காப்பீடு செலுத்த கால நீட்டிப்பு வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் பெரிய, சிறிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தொழில் வரிக்கு மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

24 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

24 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

24 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

24 hours ago