#BREAKING: தொலைதூர கல்வி பட்டதாரிகளுக்கு பதவி உயர்வு கிடையாது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Default Image

தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதிவு உயர்வு கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என்றும் தொலைதூர கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்ததால் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் 2ம் நிலை சார்பதிவாளர் பதவி வகித்த செந்தில்குமாருக்கு பதவி உயர்வு வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில், தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதிவு உயர்வு வழங்க முடியாது என்று கூறி வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்