நாடு முழுவதும் நடந்து வரும் அதிரடி சோதனையில் இதுவரை 106 பேரை கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை.
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதில் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரில் தமிழகத்தில் 10 பேர் உள்பட நாடு முழுவதும் இதுவரை 106 பேர் PIF நிர்வாகிகளை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 10, ஆந்திராவில் 5, அசாமில் 9, டெல்லியில் 3, கர்நாடகாவில் 20, கேரளாவில் 22, மத்திய பிரதேசத்தில் 2, மகாராஷ்டிராவில் 20, புதுச்சேரியில் 3, ராஜஸ்தானில் 2, உத்தரபிரதேசத்தில் 8 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இன்னும் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருவதால் கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் குறிப்பாக ப்ரண்ட் ஆப் இந்தியாவின் முக்கிய நிர்வாகிகள் தான் கைது செய்யப்பட்டு வருவதாகவும், அவர்களது பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…