முக்கிய அறிவிப்பு! சிறுமி வன்கொடுமை செய்து கொலை-துப்புக்கொடுத்தால் உரிய சன்மானம் வழங்கப்படும்

Published by
Venu

கோவையில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொதுமக்கள் துப்புக்கொடுத்தால் உரிய சன்மானமும், துப்புக்கொடுத்தவர்கள் யார் என்பது ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சதீஷ் என்பவர் கோவை மாவட்டம் பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூரை சேர்ந்தவர் ஆவார் . இவரது மனைவி பெயர் வனிதா.சதிஷ்-வனிதா தம்பதியினருக்கு  இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் திப்பனூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 25 ஆம் தேதி  வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் கொடுத்தனர்.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் கீழ் போலீசார் விசாரணையை தொடங்கினர்.போலீசார் நடத்திய விசாரணையில் புதூர் என்ற இடத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் பிரேத பரிசோதனை நேற்று வெளியானது.வெளியான அறிக்கையில்,  கொலைக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், கழுத்தை நெறித்து கொல்லப்பட்டதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இதனால் போலீசார் வழக்கு விசாரணையை தொடர்ந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Image result for கோவை சிறுமி

இதனையடுத்து கோவை துடியலூர் ஜங்சனில் சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு ஏராளமானோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதேபோல் தமிழகம் முழுவதும் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பு கொடுத்தால் சன்மானம் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்

இந்நிலையில் போலீசால்  இன்று வரை குற்றவாளிகளை  கண்டுபிடிக்க முடியவில்லை .இதனால் போலீஸ் தரப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.அதில் கோவையில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொதுமக்கள் துப்புக்கொடுத்தால் உரிய சன்மானமும், துப்புக்கொடுத்தவர்கள் யார் என்பது ரகசியம் காக்கப்படும் என்றும் இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தின் மீது கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடர்ந்து புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது.

எனவே இந்த வழக்கு தொடர்பாக பொதுமக்கள் 9498174227 ,9443122744, 9498174226 என்ற  தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

Published by
Venu

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago