BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் கண்ணன், சேகர் இடம் மாற்றம்!ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிரடி உத்தரவு

Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் கண்ணன், சேகர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துணை வட்டாட்சியர் கண்ணன் கயத்தாறுக்கும், சேகர் ஸ்ரீவைகுண்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை இடமாற்றம் செய்து  தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.இதனால் தூத்துக்குடி நகரமே கலவர பூமியாக மாறியது. போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த பலர்  தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர்  கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இரண்டு துணை வட்டட்சியாளர்கள் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டனர் என்று  முதல் தகவல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

மேலும்   தூத்துக்குடி மண்டல துணை கண்ணன் மற்றும் தனி துணை வாட்டாட்சியார் சேகர் ஆகிய இரண்டு துணை வட்டட்சியாளர்கள் உத்தரவிட்டவர்கள் ஆவர்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்