BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்த 2 துணை வட்டாட்சியர்கள் உத்தரவு?திரேஸ்புரத்தில் மீண்டும் மீண்டும் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கி சூடு?

Published by
Venu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்த 2 துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டது தெரியவந்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் முதலில் 65 பேரும், பின்பு 74 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து தூத்துக்குடியில் பதட்ட நிலை நீடித்து வந்தது. 21ந் தேதி அன்றிலிருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இரண்டு துணை வட்டட்சியாளர்கள் உத்தரவிட்டது தெரியவந்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் எச்சரித்தும் வன்முறை தொடர்ந்ததால் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட நேரிட்டது என்று கண்ணன் தெரிவித்துள்ளார்.மேலும் மற்றொரு வட்டட்சியாளர் சேகர் கூறுகையில், ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு என்று தெரிவித்துள்ளார்.

திரேஸ்புரத்தில் மீண்டும் மீண்டும் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கி பிரயோகம் செய்ய ஆய்வாளருக்கு ஆணையிடப்பட்டது. தூத்துக்குடி மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் துப்பாக்கிச்சூடு உத்தரவு பற்றி எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்து சேதத்தை தவிர்க்க துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு  என்றும்  வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு குறித்த முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

6 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

14 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago