BREAKING NEWS:தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவன் தான் காரணம்!புகைப்பட ஆதாரத்துடன் கூறிய முதலமைச்சர் பழனிசாமி

Default Image

தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு திமுகவே காரணம் என பேரவையில் முதலமைச்சர் குற்றச்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி பேரவையில், தூத்துக்குடி கலவரத்தின் போது அரசு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை பேரவையில் காட்டி  பேசினார்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடைபெற்ற புகைப்படங்களை முதலமைச்சர் காட்டினார்.மேலும் அவர் கூறுகையில், திமுக ஆட்சியில்தான் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது..போராட்டத்திற்கு திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவன் காரணம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக புகைப்படங்களை காட்டி முதலமைச்சர் பேசியுள்ளார்.144 தடை உத்தரவை மீறி திமுக எம்.எல்.ஏ கீதாஜீவன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்