BREAKING NEWS:உதகை அருகே பேருந்து விபத்து!உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Default Image

உதகை அருகே மந்தாடாவில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
முன்னதாக  உதகையில் இருந்து குன்னூருக்கு இன்று காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மந்தடா என்ற பகுதிக்கு சென்றபோது மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 200 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.  படுகாயம் அடைந்த 34-பேருக்கு   சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசென்ட் திவ்யா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்