#Breaking : புதிய காவல் நிலையங்கள்.. கூடுதல் சிசிடிவி.., என்ஐஏ விசாரணை.! முதல்வர் அதிரடி அறிக்கை.!

Published by
மணிகண்டன்

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்ற கோரிக்கை உட்பட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.   

கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை காரில் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்ததாக 5 நபர்கள் உபா எனும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக தலைமைசெயலர் இறையன்பு  மத்திய உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவர்சிவாதம், உளவுத்துறை அதிகாரி  ஆகியோர் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம் முடிவடைந்து, பல்வேறு அதிரடி உத்தரவுகள், பரிந்துரைகள் அடங்கிய தமிழக அரசின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கோவை கார் வெடி விபத்து தொடர்பாக எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில், கோவையில் பாதுகாப்பினைத் தொடர்ந்து உறுதி செய்திட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கார் வெடி விபத்து தொடர்பாக காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும்,

கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்த கரும்புக் கடை சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் , பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமிராக்களை அதிகப்படுத்தவும் இதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago