#BREAKING: தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்..!

Default Image

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வருவதாக டி.ஜி.பி தெரிவித்தார்.

இரண்டு வருடத்திற்கு  முன் சென்னை அயனாவரத்தில் இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது, அதில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஒரு ரவுடி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கை ரத்து செய்ய வேண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் தலைமையிலான அமர்விற்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ரவுடி கலாச்சாரம் அதிகரித்து வருவதாகவும் இதை கட்டுப்படுத்த என்ன..? நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு தற்போது தமிழக டி.ஜி.பி தரப்பில் அறிக்கை ஒன்றை  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வருவதாகவும், சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக டிஜிபி தெரிவித்தார்.இதையடுத்து, நீதிபதிகள் சட்டமன்றத்தில் எப்போது மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கேள்வி எழுப்பினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
Suburban trains
TN Driver Conductor
Chidambaram - Gun Shot
trump zelensky phone call
modi bill gates
mk stalin and annamalai