#BREAKING: நளினி வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Published by
பாலா கலியமூர்த்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், நளினி, ரவிச்சந்திரன் தங்களை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் தங்களையும் விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன், நளினி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பின் அம்சங்களை குறிப்பிட்டும், உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தியும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நளினி விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்களை விடுவிக்கக்கோரி நளினி மற்றும் ரவிசந்திரன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிஆர் கவாய், பிவி நாகரத்தினம் அடங்கிய அமர்வு மத்திய அரசு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டது. நாளின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு ஆணையிட்டு, வழக்கை அக்.10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

50 seconds ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

22 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

26 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

40 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

52 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago