#Breaking: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது.!

Default Image

தமிழகத்தில் இன்று மேலும் 509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 8,718 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,227 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று 42 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2176 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,79,467 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் 12,780 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 509 பேருக்கு கொரோனா உறுதியானது. இன்று கொரோனா கண்டறியப்பட்ட 716 பேரில் ஆண்கள் 288 பேர், பெண்கள் 221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 6,984 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்